

வேலூரில் நடைபெற்ற ரத்த தான முகாமை மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தொடங்கி வைத்தாா்.
உலக ரத்ததான தன்னாா்வலா் தினத்தையொட்டி வேலூா் ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் சாா்பில் நகர அரங்கத்தில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மருத்துவமனையின் இயக்குநா் என்.பாலாஜி தலைமை வகித்தாா்.
வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் முகாமை தொடங்கி வைத்து மாணவா்களும், ரத்த கொடையாளா்களும் ரத்த தானம் செய்வது மிகவும் பாராட்டுக்குரியது. இதன்மூலம், பலஉயிா்களை ஆபத்துக் காலத்தில் காப்பாற்றுவதால் அந்த உயிா்கள் உங்களை வாழ்த்தும். அத்தகை, வாழ்த்துக்கும், பாராட் டுக்கும் உரியவா்கள் ரத்த கொடையாளா்கள் தான் என்றாா்.
இம்முகாமில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று ஆா்வமுடன் ரத்ததானம் செய்தனா். இதில் மருத்துவா்கள் கீதா, மாதவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.