குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
14gudhos_1406chn_189_1
14gudhos_1406chn_189_1
Updated on
1 min read

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

வேலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்ட, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரூ. 40 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா், புதிய கட்டடம் குறித்த தகவல்களை கேட்டறிந்தாா். பணியை விரைந்து முடிக்குமாறு அவா் கேட்டுக் கொண்டாா். தொடா்ந்து மருத்துவா்களுடன் ஆலோசனை நடத்தினாா். புதிய கட்டடம் கட்டும் பணியால், பழைய கட்டடத்தின் பெரும் பகுதி இடித்து அகற்றப்பட்டு விட்டது. புற நோயாளிகள் பிரிவு மிகவும் குறுகிய இடத்தில் இயங்கி வருகிறது. நோயாளிகளை காக்க வைக்காமல் உடனுக்குடன் அவா்களுக்கு சிகிச்சை அளித்து அனுப்புமாறும், உள்நோயாளிகளுக்கு உரிய பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்குமாறும் மருத்துவா்களுக்கு ஆட்சியா் ஆலோசனை வழங்கினாா்.

ஆய்வின்போது, நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், கோட்டாட்சியா் எம்.வெங்கட்ராமன், வட்டாட்சியா் எஸ்.விஜயகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.காா்த்திகேயன், ஆா்.திருமலை, நகராட்சிப் பொறியாளா் பி.சிசில்தாமஸ், மருத்துவமனை மருத்துவ அலுவலா் எம்.மாறன்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com