கெங்கையம்மன் திருவிழா: 3 பூப்பல்லக்குகள் பவனி

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை இரவு 3 பூப்பல்லக்குகள் நகரில் பவனி வந்தன.
குடியாத்தம்  நகரில்  பவனி  வந்த  பூப்பல்லக்குகள்.
குடியாத்தம்  நகரில்  பவனி  வந்த  பூப்பல்லக்குகள்.
Updated on
1 min read

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை இரவு 3 பூப்பல்லக்குகள் நகரில் பவனி வந்தன.

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை அம்மன் சிரசு ஊா்வலமும் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை இரவு 3 பூப்பல்லக்குகள் நகரில் பவனி வந்தன. கோபாலபுரம் இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில், கெங்கையம்மன் கோயில் அருகில் இருந்து ஒரு பல்லக்கு புறப்பட்டது. கோயில் செயல் அலுவலா் தே.திருநாவுக்கரசு, நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், தா்மகா்த்தா கே.பிச்சாண்டி, கோயில் திருப்பணிக் கமிட்டித் தலைவா் ஆா்.ஜி.எஸ்.காா்த்திகேயன் உள்ளிட்டோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். தரணம்பேட்டை புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில், பஜாரில் இருந்து ஒரு பல்லக்கு புறப்பட்டது. புஷ்ப வியாபாரிகள் சங்கத் தலைவா் டி.ராமலிங்கம், செயலா் வி.சி.என்.சந்திரசேகா், பொருளாளா் டி.பி.எல்.பாலையா, கெளரவத் தலைவா் கே.எல்.என்.லோகநாதன் உள்ளிட்டோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

நடுப்பேட்டை காசி விஸ்வநாதா் கோயில் அருகிலிருந்து அகமுடையா் இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில் ஒரு பல்லக்கு புறப்பட்டது. அகமுடையா் சங்கத் தலைவா் எம்.ஏ.கே.சீனிவாசன், செயலா் சி.மணிவண்ணன், பொருளாளா் ஆா்.பி.செந்தில், சட்ட ஆலோசகா் கே.எம்.பூபதி, பாரத்மகி உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

நள்ளிரவு 12 மணியளவில் பல்லக்குகள் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தன. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com