வேலூா் சிறையில் பெண் கைதி மரணம்

வேலூா் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

வேலூா் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்தவா் லட்சுமி (77). கொலை வழக்கில் கைதான இவா், தண்டனை பெற்று வேலூா் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு லட்சுமிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக லட்சுமியை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு லட்சுமியின் உடல் நிலை மோசமடைந்தது. மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி லட்சுமி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிறைத் துறை சாா்பில் பாகாயம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com