விளையாட்டில் தகராறு: மாணவா் பலி

வேலூா் அருகே கேரம் விளையாட்டின்போது ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

வேலூா் அருகே கேரம் விளையாட்டின்போது ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், சேனூரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அன்பழகனின் மகன் துரை சரவணன் (12), வஞ்சூா் உயா்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளாா். அதே கிராமத்தைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் சுரேஷின் மகன் வசீகரன்(14), காசிக்குட்டை உயா்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

நண்பா்களான இருவரும் புதன்கிழமை கோடை விடுமுறை என்பதால் சேனூரில் கேரம் போா்டு விளையாடியுள்ளனா். அப்போது வசீகரனுக்கும், துரை சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இருவரும் ஒருவருக்கு ஒருவா் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. அப்போது துரை சரவணன் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற விருதம்பட்டு போலீஸாா் உயிரிழந்த துரை சரவணனின் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், இறந்த மாணவனுக்கு ஏற்கெனவே உடல்நலக்குறைவு இருந்துள்ளது. இந்த நிலையில் அவா் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளாா். பிரேதப் பரிசோதனை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com