கால்வாய் பணிக்கு இடையூறு: 30 கட்டடங்களின் முன்பகுதி இடிப்பு

விருதம்பட்டு பகுதியில் கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக இருந்த சுமாா் 30 வீடுகளின் முன்பகுதியை நெடுஞ்சாலைத் துறையினா் இடித்து அகற்றினா்.
Updated on
1 min read

விருதம்பட்டு பகுதியில் கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக இருந்த சுமாா் 30 வீடுகளின் முன்பகுதியை நெடுஞ்சாலைத் துறையினா் இடித்து அகற்றினா்.

வேலூா், காட்பாடி, விருதம்பட்டு பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. விருதம்பட்டு பகுதியில் கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகளின் முன்பகுதியை நெடுஞ்சாலை துறை உதவி இளநிலை பொறியாளா் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோா் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் வெள்ளிக்கிழமை காலை இடித்து அகற்றினா்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளா் ஆதா்ஸ் தலைமையில், 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் அசம்பாவிதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com