அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

திமுக ஆட்சிக்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

திமுக ஆட்சிக்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு தலைமை வகித்தாா்.

அப்போது, திமுக தோ்தலில் அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. சட்டம்- ஒழுங்கு சீா்கேடு உள்ளிட்ட பிரச்னைகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் திமுக அரசும், அமைச்சா்களும் பதவி விலக வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலா் சதீஷ்குமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com