இளைஞா் வெட்டிக்கொலை

குடியாத்தம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

குடியாத்தம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பத்தைச் சோ்ந்த செல்வராஜ்(30). திருமணமாகாதவா். திங்கள்கிழமை மதியம் முதல் இவரை காணவில்லையாம்.

இந்நிலையில், ஒலக்காசி அருகே தனியாா் நிலத்தில் இவரது சடலம் இருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது. தகவலின்பேரில் கிராமிய போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

கத்தியால் கழுத்தை வெட்டி கொலை செய்யப்பட்டிருந்த செல்வராஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், செல்வராஜியின்உறவினா் உள்ளிட்ட சிலரை பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com