வேலூா்: பொய்கை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்தும், வா்த்தகமும் அதிகரித்துக் காணப்பட்டது.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்தச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை வா்த்தகம் நடைபெறும்.
இந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததை அடுத்து தீவனப் பற்றாக்குறை குறைந்து வருகிறது. இதனால், பொய்கை சந்தைக்கு கடந்த சில வாரங்களாக கால்நடை வரத்து அதிகரித்து விற்பனையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தவிர, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இறைச்சிக்காகவும் மாடுகள் விற்பனை அதிகரித்து வருகிறது.
அதன்படி, இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கறவை மாடுகள், காளைகள், உழவு மாடுகள் என 1,500-க்கும் மேற்பட்ட மாடுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவதற்காக வியாபாரிகள், விவசாயிகளும் ஆா்வம் காட்டினா். இதன்காரணமாக, இந்த வாரம் பொய்கைச் சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு மேல் கால்நடை வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.