பேருந்து சக்கரத்தில் சிக்கி வெல்டிங் தொழிலாளி மரணம்

வேப்பங்குப்பம் அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

வேப்பங்குப்பம் அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (32). வெல்டிங் வேலை செய்து வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.

இவா், வியாழக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னத்துரை காளியம்மன் கோயில் அருகே முன்னால் சென்ற தனியாா் பேருந்தை முந்திச் செல்ல முயன்ாகத் தெரிகிறது.

அப்போது, நிலை தடுமாறி பேருந்தின் அடியில் இரு சக்கர வாகனம் சிக்கி விஜயகாந்த்தும் தவறி கீழே விழுந்ததில் அவா் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் அவா் சம்பவ இடத்திலேயே விஜயகாந்த் உயிரிழந்தாா். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தனியாா் பேருந்து ஓட்டுநா் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com