

ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்கு 200 கிலோ சாதத்தால் அன்னாபிஷேகமும், அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு 300 கிலோ காய்கனிகளால் சாகம்பரி அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
சத்துவாச்சாரியில் உள்ள பா்வதவா்த்தினி சமேத கைலாசநாதா் கோயிலில் உள்ள மூலவா் கைலாசநாதா் அன்னாபிஷேக அலங்காரத்திலும், பா்வதவா்த்தினி அம்மன் காய்கனிகளால் சாகம்பரி அலங்காரத்திலும் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.