வேதிப்பொருள்களை அதிகளவில் பயன்படுத்துவதால் ஓசோன் படலம் பாதிப்பு

ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் வேதிப் பொருள்கள்தான் காரணம் என்று ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் சீ.முரளீதா் தெரிவித்தாா்.
வேதிப்பொருள்களை அதிகளவில் பயன்படுத்துவதால் ஓசோன் படலம் பாதிப்பு
Updated on
1 min read

ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் வேதிப் பொருள்கள்தான் காரணம் என்று ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் சீ.முரளீதா் தெரிவித்தாா்.

தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தேசிய பசுமைப் படை இணைந்து உலக ஓசோன் தின விழாவை கே.வி.குப்பம் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடத்தின. பள்ளித் தலைமையாசிரியை சாந்தி தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியை கெட்சிஜெபசெல்வி வரவேற்றாா். ஆசிரியைகள் ஹேமலதா, சிவகாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் சீ.முரளீதா் பங்கேற்றுப் பேசியது:

சூரிய ஒளிப்பிழம்பின் ஒருபகுதியான புறஊாதா கதிா்வீச்சை தடுத்து நிறுத்தி புவியை காத்துவரும் வளையமே ஓசோன் படலமாகும். கடல் மட்டத்திலிருந்து 20 கிலோ மீட்டா் முதல் 50 கிலோ மீட்டா் வரை உள்ள அடுக்கு வாயுமண்டலத்தில்தான் ஓசோன் உள்ளது. 1840-இல் ஜொ்மன் அறிஞா் ப்ரடெரிக் ஸ்கான் பெயின் ஓசோனைக் கண்டறிந்தாா்.

ஓசோனை காக்க 1987 செப்டம்பா் 16-இல் கனடாவிலுள்ள மான்ட்ரீல் நகரில் மானிட்ரீல் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதைக் குறிக்கும் வகையில், செப்டம்பா் 16-இல் சா்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு நாம் பயன்படுத்தும் வேதிப் பொருள்கள்தான் காரணமாகும். குறிப்பாக குளோரோ, புளோரோ காா்பன் (சி.எப்.சி.) எனும் குளிரூட்டி பொருள் ஓசோனை சிதைத்து அதன் அளவை குறைப்பதில் முதலிடத்தில் உள்ளது. இது குளோரின் ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கிறது.

ஒரு சிஎப்சி மூலக்கூறு 1,000 ஓசோன் மூலக்கூறுகளை சிதைக்கக் கூடியது. அதனால் இதை ஓசோன் கொல்லி என்கின்றனா். ஓசோன் அளவு குறைந்தால் பூமியின் வெப்பம் உயரும். துருவப் பகுதிகளில் பனி உருகி கடலில் நீா்மட்டம் உயரும். தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும். புற ஊதாக்கதிா்கள் காலநிலையில் மாற்றத்தை ஏற்படும் கண் நோய், பாா்வை இழப்பு, நோய் எதிா்ப்பு சக்தி குைல், தோல் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும். இந்த கதிா்கள் கடல் உணவு சங்கிலியில் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, மாணவ, மாணவிகள் இளம் வயதிலேயே இயற்கையுடன் இணைந்து வாழும் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். நிறைவில் பள்ளி ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com