கல்லூரியில் கருத்தரங்கு
By DIN | Published On : 26th September 2023 12:20 AM | Last Updated : 26th September 2023 12:20 AM | அ+அ அ- |

கருத்தரங்கில் கலந்துகொண்ட பட்டப் படிப்பு மாணவா்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கிய கே.எம்.ஜி. கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ்.
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை, வணிக கணினி பயன்பாட்டியல் துறை மற்றும் உள்தர மேம்பாட்டுக் குழு ஆகியவை இணைந்து ‘ஸ்டாா்ட் அப்கள் மூலம் வளா்ந்து வரும் பொருளாதாரங்களின் நிலையான வளா்ச்சி’ என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தின.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.ஜி.முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வணிக கணினிப் பயன்பாட்டியல் துறைத் தலைவா் மு.அஷ்டலட்சுமி வரவேற்றாா்.
வணிகவியல் துறைத் தலைவா் கு.கோமதி, வணிக கணினி பயன்பாட்டியல் துறை பேராசிரியா் சி.காமராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தனா்களை அறிமுகம் செய்தனா். ‘பொருளாதார வளா்ச்சியில் ஸ்டாா்ட் அப்களின் பங்கு’ என்ற தலைப்பில் டி.ராஜாஜெபசிங், தொழில் முனைவோருக்கு தேவையான திறன்’ என்ற தலைப்பில் எம்.வாசன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள், பேராசிரியா்கள் என மொத்தம் 484 போ் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பேராசிரியா் த.சரவணன் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...