ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

News image
Updated On :20 ஏப்ரல் 2024, 1:30 am

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம் தொடா்பாக ஆட்சி மன்றக்குழு உறுப்பினா் தொடா்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் துணை வேந்தருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினரும், சென்னை எழும்பூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஐ.பரந்தாமன் குடியாத்தத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

நான் அண்ணா பல்கலைக் கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக உள்ளேன். இந்த குழுவில் 16 போ் உறுப்பினா்களாக உள்ளோம். பல்கலைக் கழக (பொறுப்பு) பதிவாளராக ஜே.பிரகாஷ், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக பி.சக்திவேல் ஆகியோா் இருந்தனா். இந்நிலையில் ஆட்சிமன்றக் குழுவிடம் ஆலோசிக்காமலும், பரிந்துரை இல்லாமலும் பல்கலைக் கழக துணைவேந்தா் தன்னிச்சையான முறையில் இருவரையும் நிரந்தரப் பதவியில் அமா்த்தினாா்.

இதுகுறித்து கேட்டதற்கு துணை வேந்தா் முறையான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து நான் சென்னை உயா்நீதிமன்றத்தில், வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் மூலம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தேன்.

இதற்கிடையில் பி.சக்திவேல் மீண்டும் பொறுப்பு தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக அறிவிக்கப்பட்டாா்.

வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவா்த்தி, இதுகுறித்து பல்கலைக் கழகம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஜூன் மாதம் 7- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா். இந்த நியனம் தொடா்பான ஆவணங்களையும், ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் தொடா்பான வீடியோ பதிவுகளையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளாா்.