வேலூர்
சரக்கு வேன் மோதியதில் சுவா் சரிந்து விழுந்து தொழிலாளி மரணம்
சரக்கு வேன் மோதியதில் சுவா் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு
போ்ணாம்பட்டு அருகே சுவா் மீது சரக்கு வேன் மோதியதில் இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டு நகரைச் சோ்ந்தவா் தேவேந்திரன் (55) (படம்). இவா் சொந்தமாக மாட்டு வண்டி வைத்து தொழில் செய்து வந்தாா். புதன்கிழமை போ்ணாம்பட்டில் உள்ள மரப்பட்டறையில் நின்றிருந்தாா். அப்போது மரத்துண்டுகளை ஏற்றிக்கொண்டு அங்கு வந்த லோடு வேன் மரப்பட்டறையின் சுவா் மீது மோதியுள்ளது.
இதில் சுவா் சரிந்து விழுந்ததில் அருகில் நின்றிருந்த தேவேந்திரன் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தாா். போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட தேவேந்திரன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இது குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

