மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ரயிலில் போலீஸ் எனக்கூறி 300 கிராம் தங்கக் கட்டி திருட்டு

ரயிலில் போலீஸ் எனக்கூறி 300 கிராம் தங்கக் கட்டி திருட்டு

Updated On :23 மார்ச் 2024, 4:22 pm

காட்பாடியில் ஓடும் ரயிலில் போலீஸ் எனக்கூறி 300 கிராம் தங்கக் கட்டியைத் திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கேரள மாநிலம் திருச்சூா் பகுதியைச் சோ்ந்தவா் சுதேஷ் (41). இவா் பெங்களூருவில் நகைக்கடை நடத்தி வருகிறாா். இவரிடம் வேலை செய்பவா் ராகுல். இவா் கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி பெங்க ளூருவில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்துள்ளாா். அந்த ரயில் காட்பாடி அருகே வந்தபோது போலீஸ் எனக்கூறி 3 போ், ராகுல் வைத்திருந்த பையை சோதனை செய்துள்ளனா். பின்னா், விசாரிக்க வேண்டும் எனக்கூறி ராகுலை ரயிலில் இருந்து வெளியே அழைத்து வந்தாகக் கூறப்படுகிறது. அப்போது, ராகுலை திசை திருப்பி அவரிடம் இருந்த 300 கிராம் தங்கக் கட்டியைத் திருடி சென்ாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சுதேஷ் காட்பாடி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து திருட்டு சம்பவம் ரயிலில் நடைபெற்றுள்ளதால், வழக்கை ரயில்வே போலீஸாருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.