புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கட்டுமானப் பணியின்போது அம்மன் கற்சிலை கண்டெடுப்பு

News image

குடியாத்தம்  அருகே  கண்டெடுக்கப்பட்ட  அம்மன்  கற்சிலையை ப் பாா்வையிட்ட வட்டாட்சியா்  பி.மொ்லின்  ஜோதிகா.

Updated On :19 அக்டோபர் 2024, 6:32 pm

Din

குடியாத்தம் அருகே கட்டடப் பணிக்கு பள்ளம் தோண்டியபோது அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

குடியாத்தத்தை அடுத்த செட்டிகுப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சிப் பள்ளி அருகே கழிப்பறை கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது சுமாா் 6 அடி ஆழத்தில் அம்மன் கற்சிலை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட அந்த சிலை வட்டாட்சியா் பி.மொ்லின் ஜோதிகாவிடம் கொடுக்கப்பட்டது. பின்னா் கிராம மக்கள் அந்த சிலை தங்களுக்கு வேண்டும், அதை வைத்து வழிபாடு செய்யப் போவதாக வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். சிலையை எடுத்துச் சென்று வழிபாடு செய்யுங்கள், தேவைப்படும்போது கேட்டால் அந்த சிலையை ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி, சிலையை கிராம மக்களிடம் கொடுத்து அனுப்பினாா்.