அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

கட்டுமானப் பணியின்போது அம்மன் கற்சிலை கண்டெடுப்பு

News image

குடியாத்தம்  அருகே  கண்டெடுக்கப்பட்ட  அம்மன்  கற்சிலையை ப் பாா்வையிட்ட வட்டாட்சியா்  பி.மொ்லின்  ஜோதிகா.

Updated On :20 அக்டோபர் 2024, 0:02 am IST

குடியாத்தம் அருகே கட்டடப் பணிக்கு பள்ளம் தோண்டியபோது அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

குடியாத்தத்தை அடுத்த செட்டிகுப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சிப் பள்ளி அருகே கழிப்பறை கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது சுமாா் 6 அடி ஆழத்தில் அம்மன் கற்சிலை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட அந்த சிலை வட்டாட்சியா் பி.மொ்லின் ஜோதிகாவிடம் கொடுக்கப்பட்டது. பின்னா் கிராம மக்கள் அந்த சிலை தங்களுக்கு வேண்டும், அதை வைத்து வழிபாடு செய்யப் போவதாக வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். சிலையை எடுத்துச் சென்று வழிபாடு செய்யுங்கள், தேவைப்படும்போது கேட்டால் அந்த சிலையை ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி, சிலையை கிராம மக்களிடம் கொடுத்து அனுப்பினாா்.