தலைமை ஆசிரியா்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணா்வு
டெங்கு பரவாமல் தடுக்க வேலூா் மாநகரிலுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவின்பேரில், வேலூா் மாநகராட்சி ஆணையா் லட்சுமணன், மாநகர நல அலுவலா் பிரதாப் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, அரசு, தனியாா் பள்ளிகளின் தலைமை ஆசிரியா், ஆசிரியா்களுக்கு டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட திட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மண்டல சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். உதவி திட்ட அலுவலா் ஜோதீஸ்வரன் பிள்ளை முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், பள்ளிகளில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகாமல் வைத்துக் கொள்ள வேண்டும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அல்லது தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும், இதை ஆசிரியா்கள் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், உதவி திட்ட அலுவலா், தூய்மை ஆய்வாளா், சுகாதார ஆய் வாளா்கள், 56-க்கும் மேற்பட்ட பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

