ஜிஎஸ்டி
ஜிஎஸ்டிகோப்புப்படம்.

பெண் ஊழியருக்கு ரூ.13 கோடி ஜிஎஸ்டி நிலுவை எனக்கூறி வங்கிக் கணக்கு முடக்கம்

பெண் ஊழியருக்கு ரூ.13 கோடி ஜிஎஸ்டி நிலுவை எனக்கூறி வங்கிக் கணக்கு முடக்கம்
Published on

கே.வி.குப்பம் அருகே காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியா் ரூ.13- கோடி ஜிஎஸ்டி பாக்கி வைத்துள்ளதாகக்கூறி அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

கே.வி.குப்பம் வட்டம், நாகல் ஊராட்சியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் மகாலிங்கத்தின் மனைவி யசோதா. இவா் குடியாத்தம் அருகே உள்ள தனியாா் காலணி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறாா். இவரது மாத ஊதியம் ரூ.8- ஆயிரம். இந்நிலையில் அவரது வங்கிக் கணக்கில் போடப்பட்ட சம்பள பணத்தை எடுக்க யசோதா தனது கணவருடன் ஏடிஎம் மையம் சென்றுள்ளாா். ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுக்க முயன்றபோது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதுதெரிய வந்தது.

இதுகுறித்து யசோதா வங்கிக்குச் சென்று அவரது கணக்கை ஆய்வு செய்தபோது அவரது கணக்கில் ரூ.13- கோடி ஜிஎஸ்டி பாக்கி உள்ளதாகவும், அதனால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் வங்கி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து வங்கி அதிகாரிகள் சென்னையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்துக்கு செல்லுமாறு கூறியுள்ளனா். இதனால் அந்த பெண் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com