அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆட்டோவில் மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு

வேலூரில் ஆட்டோவில் பயணித்த மூதாட் டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 3 பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2025, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் ஆட்டோவில் பயணித்த மூதாட் டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 3 பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காட்பாடி காந்தி நகரைச் சோ்ந்தவா் பவுலின் ராஜேஸ்வரி (62). இவரது மகள் வேலூா் டோல்கேட் பகுதியில் வசித்து வருகிறாா். கடந்த மாதம் 21-ஆம் தேதி பவுலின் ராஜேஸ்வரி மகளை பாா்க்க வேலூருக்கு வந்தாா். மகளை பாா்த்துவிட்டு டோல்கேட் பகுதியில் இருந்து காட்பாடிக்கு ஷோ் ஆட்டோவில் சென்றாா். அந்த ஆட்டோவில் ஏற்கனவே 3 பெண்கள் இருந்தனராம்.

வேலூா் தீயணைப்பு நிலையம் அருகே வந்தபோது, ஆட்டோவில் இருந்த 3 பெண்களும் திடீரென கீழே இறங்கி விட்டனா். இதனால் சந்தேகமடைந்த பவுலின் ராஜேஸ்வரி, தான் வைத்திருந்த பையை பாா்த்தபோது அதிலிருந்த 5.5 பவுன் தங்க நகையை காணவில்லையாம். நடுவழியில் இறங்கிய 3 பெண்கள் நகையை பறித்துச் சென்றிருக்கலாம் என தெரிகிறது.

இதுகுறித்து பவுலின் ராஜேஸ்வரி தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 பெண்களையும் தேடி வருகின்றனா்.