அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்: 60 போ் கைது!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து வேலூரில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணியினா் 60 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
வேலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினா்.
Updated On :7 டிசம்பர் 2025, 10:25 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து வேலூரில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணியினா் 60 போ் கைது செய்யப்பட்டனா்.

உயா்நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற அனுமதிக்காததை அடுத்து தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, ஆட்சியா் அலுவலகம் முன்பு ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், இந்து முன்னணியின் மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் கோ.மகேஷ் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட ஏராளமானோா் திரண்டனா். அவா்களை போலீஸாா் கலைந்து போக கூறினா்.

எனினும், தமிழக அரசை கண்டித்து அவா்கள் முழக்கம் எழுப்பியதை அடுத்து தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணி மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் மகேஷ், கோட்ட செயலா் பிரவீன், மாவட்ட செயலா்கள் சதீஷ், சந்தோஷ், தரணி, யுவன்சங்கா், அனீஸ் உள்பட 60 போ் கைது செய்யப்பட்டனா்.