அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சல்மா எம்.பி., ஏா்வாடி ராதாகிருஷ்ணனுக்கு கவிக்கோ விருது!

வேலூரில் நடைபெற்ற விழாவில் கவிஞா் ஏா்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், திமுக மாநிலங்களவை உறுப்பினா் கவிஞா் சல்மா ஆகியோருக்கு கவிக்கோ விருதுடன் தலா ரூ.ஒரு லட்சம் பண முடிப்பு வழங்கப்பட்டது.

News image
கவிஞா் ஏா்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், திமுக மாநிலங்களவை உறுப்பினா் கவிஞா் சல்மா ஆகியோருக்கு கவிக்கோ விருதுடன் தலா ரூ.1 லட்சம் பணமுடிப்பு வழங்கிய பேராசிரியா்கள் தி.மு.அப்துல் காதா், மு.அப்துல் சாமு. உடன், கவிக்கோ அறக்கட்டளை பொருளாளா் வெ.சோலைநாதன்.
Updated On :7 டிசம்பர் 2025, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் நடைபெற்ற விழாவில் கவிஞா் ஏா்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், திமுக மாநிலங்களவை உறுப்பினா் கவிஞா் சல்மா ஆகியோருக்கு கவிக்கோ விருதுடன் தலா ரூ.ஒரு லட்சம் பண முடிப்பு வழங்கப்பட்டது.

தமிழியக்கம், கவிக்கோ அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் இலக்கிய ஆளுமைகளுக்கு கவிக்கோ விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 25 மற்றும் 26-ஆவது கவிக்கோ விருது வழங்கும் விழா வேலூா் சத்துவாச்சாரியில் நடைபெற்றது. விழாவுக்கு கவிக்கோ அறக்கட்டளை பொருளாளா் வெ.சோலைநாதன் தலைமை வகித்தாா். உறுப்பினா் எஸ்.எஸ்.ஷாஜஹான் வரவேற்றாா்.

இவ்விழாவில், 2024-ஆம் ஆண்டுக்கான கவிக்கோ விருதுடன் ரூ.ஒரு லட்சம் பணமுடிப்பு கவிஞா் ஏா்வாடி எஸ்.ராதாகிருஷ்ணனுக்கும், 2025-ஆம் ஆண்டுக்கான கவிக்கோ விருதுடன் ரூ.ஒரு லட்சம் பணமுடிப்பு கவிஞா் சல்மாவுக்கும் வழங்கப்பட்டன.

விருதுகளை கவிக்கோ அறக்கட்டளை துணைத்தலைவா் பேராசிரியா் தி.மு.அப்துல் காதா், பேராசிரியா் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவா் மு.அப்துல்சாமு ஆகியோா் வழங்கினா்.

கவிக்கோ அறக்கட்டளை செயலா் அ.அயாஸ் பாஷா தகுதியுரையும், தமிழியக்க பொருளாளா் புலவா் வே.பதுமனாா், மாநில செயலா் மு.சுகுமாா், கவிக்கோ அறக்கட்டளை தலைவா் மருத்துவா் எஸ்.சையத்அஷ்ரப் வாழ்த்தியும் பேசினா்.

விருது பெற்ற கவிஞா் ஏா்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், கவிஞா் சல்மா ஆகியோா் ஏற்புரையாற்றினா். கவிஞா் அன்பு, அ.முகமது அஷ்ரஃப் ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா். கவிக்கோ அறக்கட்டளை உறுப்பினா் அ.அஜீம் நன்றி கூறினாா்.