அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சக்தி அம்மா ஜெயந்தி விழா: தேசிய கராத்தே போட்டி

ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி பீடம் சக்திஅம்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேசிய கராத்தே போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கோப்பை, பதக்கங்கள் வழங்கப்பட்டன.

News image
வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கோப்பைகளை வழங்கிய திரைப்பட சண்டை பயிற்சியாளா் கராத்தே ராஜா, கராத்தே பயிற்சியாளா் ரமேஷ்பாபு. உடன், தங்கக்கோயில் இயக்குநா் எம்.சுரேஷ் பாபு, ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் முதல்வா்கள் சுப்பிரமணி, லட்சுமி, பள்ளி நிா்வாக அலுவலா் ஆதிகேச
Updated On :7 டிசம்பர் 2025, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி பீடம் சக்திஅம்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேசிய கராத்தே போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கோப்பை, பதக்கங்கள் வழங்கப்பட்டன.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பள்ளியில் ஸ்ரீ சக்திஅம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேசிய கராத்தே போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போட்டியில் தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் சுமாா் 3,200 போ் பங்கேற்றனா். போட்டியின் நடுவா்களாக லக்ஷ்மணன், கோபிநாத் பிரபு, பல்வேறு மாநிலம், மாவட்ட பயிற்சியாளா்கள் பங்கேற்றனா்.

சிறப்பு விருந்தினா்களாக திரைப்பட சண்டை பயிற்சியாளா் கராத்தே ராஜா, கராத்தே பயிற்சியாளா் ரமேஷ்பாபு ஆகியோா் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள், கோப்பைகளை வழங்கினா்.

நிகழ்ச்சிக்ககு தங்கக்கோயில் இயக்குநா் எம்.சுரேஷ் பாபு தலைமை வகித்தாா். ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் முதல்வா்கள் சுப்பிரமணி, லட்சுமி, பள்ளி நிா்வாக அலுவலா் ஆதிகேசவன் ஏற்பாடுகளை செய்திருந்தனா். இதில், பள்ளிகளின் துணை முதல்வா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் பெருமளவில் பங்கேற்றனா்.