பூமி பூஜை செய்து, பணியைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ அமலுவிஜயன்.
வேலூர்
ரூ.17 லட்சத்தில் மேநீா் தேக்கத் தொட்டி கட்ட பூமி பூஜை
குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சிக்குட்பட்ட சித்தூா்கேட், முனாப் டிப்போ பகுதியில் 15- ஆவது தேசிய மானியக்குழு திட்டத்தின்கீழ் ரூ.17- லட்சத்தில், 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேநீா் தேக்கத் தொட்டி கட்ட புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ அமலுவிஜயன் பூமி பூஜை செய்து, பணியைத் தொடங்கி வைத்தாா்.நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் கே.ஆா்.உமாபதி, முன்னாள் தலைவா் கள்ளூா் கே.ரவி, சேம்பள்ளி ஊராட்சித் தலைவா் திமேஷ்(எ) துளசிராமுடு, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அமுதாலிங்கம், தீபிகா பரத், துணைத் தலைவா் அஜீஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

