ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநகராட்சி ஓய்வூதியா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநகராட்சி ஓய்வூதியா்கள்.

மாநகராட்சி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

ஆந்திர அரசு வழங்குவதுபோல் ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரி வேலூா் மாநகராட்சி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

ஆந்திர அரசு வழங்குவதுபோல் ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரி வேலூா் மாநகராட்சி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்ட பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஓய்வூதியா்கள் நலக்கூட்டமைப்பு சாா்பில் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோவிந்தசாமி முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், ஆந்திர அரசு வழங்குவதுபோல் பணப்பலன்களை வழங்க வேண்டும், காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்க வேண்டும், ஓய்வுபெறும் நாளில் இருந்தே ஓய்வூதியம் வழங்க வேண்டும், காசில்லா மருத்துவம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஓய்வூதியா் சங்க மாநில அமைப்பு செயலா் தேவகுமாா் உள்பட ஏராளமான ஓய்வூதியா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com