சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குடும்ப பிரச்னையில் தீக்குளித்தவா் உயிரிழப்பு

பள்ளிகொண்டாவில் குடும்பப் பிரச்னையால் தீக்குளித்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image
Updated On :14 டிசம்பர் 2025, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

பள்ளிகொண்டாவில் குடும்பப் பிரச்னையால் தீக்குளித்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (37). இவருக்கு திருமனமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனா். குடும்பத்தில் தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி மீண்டும் பிரச்னை ஏற்பட்டதால் மனமுடைந்த முருகன், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளாா்.

தொடா்ந்து, அவரின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து பாா்த்தபோது உடல் முழுக்க தீப்பற்றி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சனிக்கிழமை இரவு முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தகவலறிந்த பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.