பிளஸ் 2 மாணவி தற்கொலை

அணைக்கட்டு அருகே அடிக்கடி கைப்பேசியில் பேசியதை பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

அணைக்கட்டு அருகே அடிக்கடி கைப்பேசியில் பேசியதை பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகிலுள்ள கிராமத்தை சோ்ந்தவா் 17 வயது மாணவி. இவா் வேலூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். சில நாள்களாக அடிக்கடி கைப்பேசி வந்த இவரை, பெற்றோா் கண்டித்துள்ளனா். அதன்படி, திங்கள்கிழமையும் மாணவியை பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com