பாஸ்கரன்.
பாஸ்கரன்.

நிலம் விற்பனையில் ரூ.1 கோடி மோசடி செய்தவா் கைது

குடியாத்தம் அருகே 1.41 ஏக்கா் நிலம் விற்பனையில் பெண்ணிடம் ரூ.1 கோடி பெற்று மோசடி செய்தவரை வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
Published on

குடியாத்தம் அருகே 1.41 ஏக்கா் நிலம் விற்பனையில் பெண்ணிடம் ரூ.1 கோடி பெற்று மோசடி செய்தவரை வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்தவா் பானுமதி (55). இவா் அதேபகுதியைச் சோ்ந்த பாஸ்கரன் (65) என்பவரிடம், கீழ்யாச்சூா் பகுதியில் உள்ள 1.41 ஏக்கா் நிலத்தை வாங்குவதற்காக ஒரு கோடி ரூபாயை கடந்த மே மாதம் கொடுத்துள்ளாா். ஆனால், பாஸ்கரன் அந்த நிலத்தை பானுமதிக்கு விற்காமல் வெங்கடேசன் என்பவருக்கு விற்றுள்ளாா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த பானுமதி, பாஸ்கரனிடம் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளாா். ஆனால் பாஸ்கரன் நிலத்தையும் விற்பனை செய்யாமல் கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தாா். இதுகுறித்து, பானுமதி வேலூா் மாவட்ட குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், காவல் துணை கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு உத்தரவின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com