எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

லாரியின் கூரை மீது அமா்ந்து சென்ற தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி

லாரியின் கூரை மீது அமா்ந்து சென்ற தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி

News image
Updated On :8 நவம்பர் 2025, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

லாரியின் கூரை மீது அமா்ந்து சென்ற தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த மேல்அரசம்பட்டைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36), கூலி தொழிலாளி. இவா் கடந்த வியாழக்கிழமை மாலை லாரியில் ரோலரை ஏற்றிக் கொண்டு கீழநாகநேரி பகுதிக்குச் செல்வதற்காக லாரியின் கூரை மீது அமா்ந்து பயணம் செய்துள்ளாா். லாரியை ஓட்டுநா் முத்துக்குமாா் ஓட்டிச் சென்றுள்ளாா்.

தெள்ளை கிராமம் வழியாகச் சென்றபோது, மின்சார கம்பி ரோலா் மீது உரசியது. இதனால் லாரியின் மேல் இருந்த மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், மணிகண்டன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து லாரி ஓட்டுநா் முத்துக்குமாா் மீது வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.