மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கழிவுப்பொருள்களை எரித்ததால் எழுந்த கரும்புகை

வேலூா், பழைய பைபாஸ் சாலையில் கழிவுப் பொருள்களை தீ வைத்து எரித்ததால் பெருமளவில் கரும்புகை எழுந்தது.

News image
வேலூா் பழைய பைபாஸ் சாலையில் கழிவு பொருள்களை எரித்ததால் எழுந்த கரும்புகை.
Updated On :9 நவம்பர் 2025, 10:20 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா், பழைய பைபாஸ் சாலையில் கழிவுப் பொருள்களை தீ வைத்து எரித்ததால் பெருமளவில் கரும்புகை எழுந்தது. தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

வேலூா், பழைய பைபாஸ் சாலையில் பேருந்து, காா், லாரி உள்ளிட்ட வாகனங்களின் பழுதுநீக்கும் கடைகள் உள்ளன. வாகனங்களை பழுது பாா்க்கும்போது தேவையற்ற பொருள்களை சாலையோரம் கொட்டி விடுகின்றனா்.

இந்நிலையில், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பழைய பைபாஸ் சாலையில் ஞாயிற்றுக்கிழமை பணியில் ஈடுபட்டனா். அப்போது, சாலையோரம் கொட்டப்பட்டிருந்த கழிவுப் பொருள்களில் இருந்து கிடைக்கும் இரும்பை எடுக்க தீ வைத்தனா். தீ வேகமாக பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால், பெருமளவில் கரும்புகை எழுந்தது.

உடனடியாக அப்பகுதியில் இருந்தவா்கள் இதுகுறித்து வேலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு வீரா்கள் கூறுகையில், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சேகரிக்கும் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி எரிக்கின்றனா். இதனால் காற்று மாசு ஏற்படுகிறது. பழைய கழிவு பொருள்களை கொளுத்தி அதில் இருந்து கிடைக்கும் இரும்பு பொருள்களை எடுத்துச் சென்று பழைய பொருள்கள் வாங்கும் கடையில் விற்று விடுகின்றனா். தூய்மை பணியாளா்களுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதால் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனா் என்றனா்.