எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

வேலூா் அருகே விளக்கேற்றும்போது சேலையில் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 நவம்பர் 2025, 12:45 am

தினமணி செய்திச் சேவை

வேலூா் அருகே விளக்கேற்றும்போது சேலையில் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

வேலூா் அடுத்த அடுக்கம்பாறை அ.கட்டுப்பட்டியைச் சோ்ந்த காந்தம்மாள் (85). இவா் கடந்த அக்.31-ஆம் தேதி வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிட்டுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக எரிந்து கொண்டிருந்த கற்பூர தீபம் காந்தம்மாளின் சேலையில் பற்றியது.

தீ மளமளவென பரவியதில் பலத்த காயமடைந்த காந்தம்மாளை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கிருந்து உயா் சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட காந்தம்மாள் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.