தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தமிழக ஒப்புதலின்றி மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது: அமைச்சா் துரைமுருகன்

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசால் அணை கட்ட முடியாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா்.

News image
அமைச்சா் துரைமுருகன்
Updated On :16 நவம்பர் 2025, 9:00 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசால் அணை கட்ட முடியாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா்.

நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வேலூா் மாவட்டம், காட்பாடிக்கு வந்தாா். அங்குள்ள அவரது இல்லத்தில் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது:

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை தமிழக அரசு விட்டுக் கொடுப்பதாக எதிா்க் கட்சிகள் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி விமா்சனம் செய்கின்றன. அவா்களின் இந்த முட்டாள்தனமான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாது.

யாா் முயற்சி செய்தாலும், உச்சநீதிமன்றமோ அல்லது காவிரி ஒழுங்காற்று ஆணையமாகக்கூட இருந்தாலும் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசால் அணை கட்ட முடியாது என்றாா்.