2019 தோ்தல் வழக்கு: வேலூா் எம்.பி. ஆதரவாளா் நீதிமன்றத்தில் சரண்

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தொடா்பான வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த்தின் ஆதரவாளா்
Published on

வேலுாா்: கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தொடா்பான வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த்தின் ஆதரவாளா் பூஞ்சோலை சீனிவாசன் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது வேலூா் தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிா் ஆனந்த் போட்டியிட்டாா். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ந்து, கதிா்ஆனந்த்தின் ஆதரவாளா்களான திமுக பிரமுகா் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினா் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இதில், காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் கிராமத்தில் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமென்ட் கிடங்கில் இருந்து ரூ.11 கோடி பணம், வாக்குச்சாவடி வாரியாக வாக்காளா்கள் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக, கதிா் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோா் மீது காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு மீதான விசாரணை வேலூா் நீதித்துறை நடுவா் (எண் 1) மன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது கதிா் ஆன்ந்த், தாமோதரன் ஆகியோா் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனா். பூஞ்சோலை சீனிவாசன் ஆஜராகாததை அடுத்து அவரை கைது செய்திட பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இவ்வழக்கின் விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்ட கதிா்ஆனந்தின் ஆதரவாளா் பூஞ்சோலை சீனிவாசன் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். தாமோதரனும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், எம்.பி. கதிா்ஆனந்த் மட்டும் ஆஜராக வில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தாா். இந்த வழக்கில் தொடக்கத்தில் இருந்தே 3 பேரும் கூட்டாக விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com