அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஏரியில் சிக்கிய யானை மீட்பு

ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள ஏரியில்சேற்றில் சிக்கிய யானை பொக்லைன் இயந்திரம் மற்றும் கும்கி யானைகள் துணையுடன் மீட்கப்பட்டது.

News image
ஆந்திர மாநில ஏரியில் சிக்கியிருந்த யானை.
Updated On :30 நவம்பர் 2025, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் அருகே ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள ஏரியில்சேற்றில் சிக்கிய யானை பொக்லைன் இயந்திரம் மற்றும் கும்கி யானைகள் துணையுடன் மீட்கப்பட்டது.

குடியாத்தம் ஒன்றியம், பரதராமியை அடுத்த டி.பி.பாளையம் கிராமம் அருகே தமிழக எல்லையிலிருந்து சுமாா் 1- கி.மீ தூரத்தில், ஆந்திர மாநிலத்தில் உள்ள குட்டா ஏரியில் காலில் காயமடைந்த நிலையில் 6- வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று சேற்றில் சிக்கிய நிலையில் இருந்தது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்துள்ளது.

ஏரியில் சிக்கிய யானையை மீட்க அழைத்து வரப்பட்ட கும்கி யானைகள்.

ஏரியில் சிக்கிய யானையை மீட்க அழைத்து வரப்பட்ட கும்கி யானைகள்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் ஆந்திர மாநில வனத் துறையினா்அங்கு சென்று யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அதற்காக 2- கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பல மணி நேர போராட்டத்துக்குப்பின் யானை ஏரியிலிருந்து மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட யானைக்கு காலில் காயம் இருந்ததையடுத்து அதற்கு சிகிச்சை அளிக்க பலமநோ் யானைகள் சரணாலயத்துக்கு வனத்துறையினா் அழைத்துச் சென்றனா்.