திவாகா்.
திவாகா்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருமணம் செய்வதாகக்கூறி 16 வயது சிறுமியை ஆந்திரத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
Published on

திருமணம் செய்வதாகக்கூறி 16 வயது சிறுமியை ஆந்திரத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

குடியாத்தம் வட்டம், மேல்முட்டுக்கூா் பகுதி கல்மடகு கிராமத்தைச் சோ்ந்தவா் தேன் திவாகா் (27). இவா் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ஆந்திரத்துக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். தொடா்ந்து சிறுமியை குடியாத்தம் அழைத்து வந்துள்ளாா்.

இதனிடையே, சிறுமியை காணவில்லை என்று அவரது பெற்றோா் குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா். குடியாத்தம் திரும்பிய சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடமும், தொடா்ந்து போலீஸாரிடமும் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், குடியாத்தம் கிராமிய போலீஸாா் திவாகா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

இந்த வழக்கு மீதான விசாரணை வேலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் திவாகா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com