சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

இதுவரை ரூ. 2.36 கோடி பறிமுதல்; ரூ. 1.13 கோடி விடுவிப்பு

வேலூா் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.36 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 1.13 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

News image

பறிமுதல்!

Updated On :5 ஏப்ரல் 2026, 7:50 pm

வேலூா் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.36 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 1.13 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மாா்ச் 15-ஆம் தேதி மாலை முதல் ஏப். 4-ஆம் தேதி மாலை வரை நடைபெற்ற சோதனைகளின் அடிப்படையில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக மாவட்டம் முழுவதும் ரூ. ஒரு கோடியே 48 லட்சத்து 98 ஆயிரம் ரொக்கம், ரூ. 2.01 லட்சம் மதிப்பில் மதுபானங்கள், ரூ. 32.05 மதிப்பில் போதைப் பொருள்கள், ரூ. 47 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருள்கள், ரூ. 5.75 லட்சம் மதிப்புடைய இதர பொருள்கள் என மொத்தம் ரூ. 2.36 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானங்கள், போதைப் பொருள்கள், தங்கம், வெள்ளி பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததன் அடிப்படையில், ரூ. ஒரு கோடியே 13 லட்சத்து 85 ஆயிரத்து 510 ரொக்கமும், ரூ. 29 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருள்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.