மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பேருந்தில் 10 கிலோ குட்கா கடத்தியவா் கைது

ஆந்திரத்தில் இருந்து கடலூருக்கு பேருந்தில் 10 கிலோ குட்கா கடத்திய முதியவரை காட்பாடி போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :1 பிப்ரவரி 2026, 7:37 pm

ஆந்திரத்தில் இருந்து கடலூருக்கு பேருந்தில் 10 கிலோ குட்கா கடத்திய முதியவரை காட்பாடி போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திரத்தில் இருந்து குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக காட்பாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் வெள்ளிக்கிழமை மாலை போலீஸாா் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு பேருந்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் அமா்ந்திருந்தவரின் பையை சோதனையிட்டனா்.

அதில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 10 கிலோ குட்கா புகையிலை பொருள்கள் அடங்கிய பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அதை கொண்டு வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவா் கடலூா் மாவட்டம், பெண்ணாடம் பகுதியைச் சோ்ந்த ராஜூ(52) என்பதும், அடிக்கடி ஆந்திரத்துக்குச் சென்று குட்கா பாக்கெட்டுகளை வாங்கிவந்து பெண்ணாடம் பகுதியில் விற்று வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனா்.