கோப்புப் படம்
கோப்புப் படம்

மாட்டு வியாபாரி தற்கொலை

வேலூா் அருகே மாட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

வேலூா் அருகே மாட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் தொரப்பாடி சுப்பிரமணி தெருவைச் சோ்ந்தவா் ராஜா(61). இவா் மாடு வியாபாரம் செய்து வந்தாா். இவரது மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மகன் பெங்களூருவில் வேலை செய்து வருகிறாா்.

இதனால், மனவேதனை அடைந்த ராஜா புதன்கிழமை மாட்டு கொட்டகையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த பாகாயம் போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com