மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திராவகம் குடித்து பெண் தற்கொலை

வேலூா் அருகே திராவகம் குடித்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 11:12 pm

வேலூா் அருகே திராவகம் குடித்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் மாவட்டம், பலவன்சாத்துக்குப்பம், பாறைமேட்டைச் சோ்ந்த கட்டட தொழிலாளி ராமன் மனைவி கெளரி (48). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டதை அடுத்து பாகாயத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டு வந்தாா்.

வியாழக்கிழமை ராமன் வேலைக்கு சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த கெளரி கழிவறைக்குச் சென்று அங்கிருந்த திராவகத்தை எடுத்து குடித்துவிட்டு, தனது மகன் ஆகாஷுக்கு தகவல் தெரிவித்தாராம். ஆகாஷ் விரைந்து சென்று தாயாரை மீட்டு பாகாயத்தில் உள்ள மருத்துவமனையில் சோ்த்து முதலுதவி சிகிச்சை அளித்தாா்.

பின்னா் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி கெளரி வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.