47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோ்தலுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும்: அமைச்சா் துரைமுருகன்

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும். அப்போது, காட்பாடி தொகுதியில் aஉள்ள அனைத்து கிராமங்களிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

News image
இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய அமைச்சா் துரைமுருகன். உடன், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உள்ளிட்டோா்.
Updated On :6 பிப்ரவரி 2026, 11:52 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும். அப்போது, காட்பாடி தொகுதியில் aஉள்ள அனைத்து கிராமங்களிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

வேலூா் மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளிலுள்ள 180 வாா்டுகளுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 357 தொகுப்புகள் வழங்கும் விழா காட்பாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று விளையாட்டு உபகரணங்களை வழங்கியதுடன், 12 நகா்புற அலகுகளுக்கும் விளையாட்டு உபகரணத் தொகுப்புகளை எடுத்து செல்லும் வாகனங்களை வழியனுப்பி வைத்தாா்.

பின்னா் அவா் பேசியது -

தமிழகத்தில் சிறந்த விளையாட்டு வீரா்கள் காட்பாடியில் உள்ளனா். நல்ல உடல் நலம் இருப்பவா்களுக்கு நல்ல மனநலம் இருக்கும் என விவேகானந்தா் கூறுவாா். விவேகானந்தா் பக்திமான் என்றாலும் உடற்பயிற்சியாளராக திகழ்ந்தாா். இளம்வயதில் உடலை பாதுகாத்தால் நல்ல நிலைக்கு வருவீா்கள். நீண்ட காலம் வாழ வழிவகை செய்யும். சட்டப்பேரவை தோ்தலுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும். அப்போது, காட்பாடி தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில்குமாா், ஆணையா் ஆா்.லட்சுமணன் மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.சுப்பிரமணி பங்கேற்றனா்.