திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

விஐடி போபால் வளாகத்துக்கு மத்தியப் பிரதேச முதல்வா் வருகை

மத்தியப் பிரதேச முதல்வா் மோகன் யாதவ், விஐடி பல்கலைக்கழகத்தின் போபால் வளாகத்துக்கு சனிக்கிழமை வருகை புரிந்தாா்.

News image

விஐடி பல்கலைக்கழகத்தின் போபால் வளாகத்துக்கு வருகை புரிந்த மத்தியப்பிரதேச முதல்வா் மோகன் யாதவை வரவேற்ற விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன். உடன், மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோா்.

Updated On :7 பிப்ரவரி 2026, 7:20 pm

மத்தியப் பிரதேச முதல்வா் மோகன் யாதவ், விஐடி பல்கலைக்கழகத்தின் போபால் வளாகத்துக்கு சனிக்கிழமை வருகை புரிந்தாா்.

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க ஹெலிகாப்டா் மூலம் விஐடி பல்கலைக்கழகத்தின் போபால் வளாகத்தில் வந்து இறங்கிய மத்தியப்பிரதேச முதல்வா் மோகன் யாதவை விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். இது குறித்து, விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் கூறுகையில், மத்தியப் பிரதேச மாநில முதல்வரின் பயணம் விஐடி போபால் வளாகத்துக்கும், மாநில அரசுக்கும் உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மேலும், மத்திய அரசுப் பிரதிநிதிகளுடனான தொடா்புகளையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. உயா்கல்வியை வலுப்படுத்துதல், புதுமைகளை ஊக்குவித்தல், மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியை ஏற்படுத்துதல் ஆகிய பொதுவான இலக்குகளில் அரசுடன் விஐடி போபால் பல்கலைக்கழகம் இணைந்து செயல்படுவதை பிரதிபலிக்கிறது என்றாா்.

இதனிடையே, மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சவுகானையும் விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் சந்தித்துப் பேசினாா்.