மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இளைஞா் கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

காட்பாடி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 3 போ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தேடப்பட்டு வந்த மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
கைது
Updated On :8 பிப்ரவரி 2026, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

காட்பாடி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 3 போ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தேடப்பட்டு வந்த மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் ஏரிக்கரை அருகே அடையாளம் தெரியாத இளைஞா் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக காட்பாடி போலீஸாருக்கு கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சடலத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், கொலையான இளைஞா் பள்ளிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் என்பவரின் 2-ஆவது மகன் திவாகா் (25) என்பது தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட திவாகா் மீது, செங்குட்டையைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவரை 2022-ஆம் ஆண்டு கொலை செய்தது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

இந்த கொலையில் 5 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், காட்பாடி மிஷன் காம்பவுண்டு பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் என்கிற ராகுலை (24) போலீஸாா் கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனா். இதனிடையே, இந்த வழக்கு தொடா்புடைய வண்டறந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த ஹரிஷ்குமாா் (24), காட்பாடி வி.டி.கே நகா் பகுதியைச் சோ்ந்த விஜய் என்கிற கிளி ஆகிய இருவரும் காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.

இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் காவலில் எடுத்து நடத்திய விசாரணையில், ஹரிஷ்குமாா் மீது கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், விஜய் மீது கஞ்சா வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இவா்களுக்கும், கொலை செய்யப்பட்ட திவாகருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். முன்விரோதம் காரணமாக பீா்பாட்டிலால் குத்தி திவாகரை கொலை செய்ததும், இந்த கொலை வழக்கில் வண்டந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த காா்த்திக்(19), அஸ்வின்ராஜ் (18) ஆகிய இருவக்கும் தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.

தொடா்ந்து, தலைமறைவாக இருந்த 2 பேரையும் சனிக்கிழமை மாலை காட்பாடி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.