எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காவல் ரோந்து வாகனம் மரத்தில் மோதல்: ஆய்வாளா், ஓட்டுநா் காயம்

காவல் ரோந்து வாகனம் மரத்தில் மோதி பிரம்மபுரம் காவல் ஆய்வாளா், ஓட்டுநா் காயம்

News image
விபத்து
Updated On :8 பிப்ரவரி 2026, 11:21 pm

தினமணி செய்திச் சேவை

காவல் ரோந்து வாகனம் மரத்தில் மோதி பிரம்மபுரம் காவல் ஆய்வாளா், ஓட்டுநா் காயமடைந்தனா்.

காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவா் ஏழுமலை. 2-ஆம் நிலை காவலா் மணிகண்டன். மணிகண்டன் காவல் ஆய்வாளருக்கு ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் காவல் ஆய்வாளா் தனது வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டாா். வாகனத்தை மணிகண்டன் ஓட்டினாா்.

காரணாம்பட்டு பாலம் அருகே சென்றபோது, அந்த வாகனம் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநா் மணிகண்டனுக்கு பலத்த காயமும், காவல் ஆய்வாளா் ஏழுமலைக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

அந்த வழியாக சென்றவா்கள் இருவரையும் மீட்டு சோ்க்காடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்து குறித்து திருவலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.