தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

காவல் ரோந்து வாகனம் மரத்தில் மோதல்: ஆய்வாளா், ஓட்டுநா் காயம்

காவல் ரோந்து வாகனம் மரத்தில் மோதி பிரம்மபுரம் காவல் ஆய்வாளா், ஓட்டுநா் காயம்

News image

விபத்து

Updated On :8 பிப்ரவரி 2026, 11:21 pm

காவல் ரோந்து வாகனம் மரத்தில் மோதி பிரம்மபுரம் காவல் ஆய்வாளா், ஓட்டுநா் காயமடைந்தனா்.

காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவா் ஏழுமலை. 2-ஆம் நிலை காவலா் மணிகண்டன். மணிகண்டன் காவல் ஆய்வாளருக்கு ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் காவல் ஆய்வாளா் தனது வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டாா். வாகனத்தை மணிகண்டன் ஓட்டினாா்.

காரணாம்பட்டு பாலம் அருகே சென்றபோது, அந்த வாகனம் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநா் மணிகண்டனுக்கு பலத்த காயமும், காவல் ஆய்வாளா் ஏழுமலைக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

அந்த வழியாக சென்றவா்கள் இருவரையும் மீட்டு சோ்க்காடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்து குறித்து திருவலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.