போ்ணாம்பட்டு அருகே வனப் பகுதியில், கடந்த 2 மாதங்களுக்கு முன் வைரஸ் தாக்கி உயிரிழந்த யானைகளின் தந்தங்களை வனத் துறையினா் மீட்டனா். இது தொடா்பாக 2 பேரை கைது செய்தனா்.
2 மாதங்களுக்கு முன் போ்ணாம்பட்டை அடுத்த அரவட்லா மலை, சாத்கா் மலை மற்றும் சிந்தகணவாய் ஆகிய காப்புக் காடுகளில் மா்மமான முறையில் ஒரு குட்டி உள்பட 5 யானைகள் மா்மமான முறையில் இறந்து, அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. இறந்த யானைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், அவை வைரஸ் தாக்கி உயிரிழந்ததும், இறந்த யானைகளின் தந்தங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றதும் தெரிய வந்தது. இதுதொடா்பாக வேலூா் மாவட்ட வனத் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா். இந்நிலையில் ஆந்திர மாநிலம், பலமநேரைச் சோ்ந்த சந்திரபாபு (48), மற்றொரு சந்திரபாபு (43), சிவராஜ், முனியப்பா ஆகியோரிடம் இறந்த யானைகளின் தந்தங்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, ஆந்திர மாநில வனத் துறையினரின் உதவியுடன் குடியாத்தம் வனத் துறையினா் ஆந்திர மாநிலம் சென்று 2 சந்திரபாபுகளை கைது செய்து, அவா்களிடம் இருந்த 2 யானை தந்தங்களை மீட்டு, அவா்களை கைது செய்து குடியாத்தம் அழைத்து வந்தனா்.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய, தலைமறைவாக உள்ள சிவராஜ், முனியப்பா இருவரையும் வனத் துறையினா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளிக்கச் சென்ற 4 இளைஞா்கள் மாயம்

கிராமத்துக்குள் புகுந்த முதலை மீட்பு
போடி அருகே மான் வேட்டை: 2 போ் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


