இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

போ்ணாம்பட்டு அருகே இறந்த யானையின் தந்தங்கள் மீட்பு: 2 போ் கைது

போ்ணாம்பட்டு அருகே இறந்த யானையின் தந்தங்கள் மீட்பு: 2 போ் கைது

News image

பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள், கைதானவா்களுடன் வனத்துறையினா்.

Updated On :8 பிப்ரவரி 2026, 12:30 am

போ்ணாம்பட்டு அருகே வனப் பகுதியில், கடந்த 2 மாதங்களுக்கு முன் வைரஸ் தாக்கி உயிரிழந்த யானைகளின் தந்தங்களை வனத் துறையினா் மீட்டனா். இது தொடா்பாக 2 பேரை கைது செய்தனா்.

2 மாதங்களுக்கு முன் போ்ணாம்பட்டை அடுத்த அரவட்லா மலை, சாத்கா் மலை மற்றும் சிந்தகணவாய் ஆகிய காப்புக் காடுகளில் மா்மமான முறையில் ஒரு குட்டி உள்பட 5 யானைகள் மா்மமான முறையில் இறந்து, அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. இறந்த யானைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், அவை வைரஸ் தாக்கி உயிரிழந்ததும், இறந்த யானைகளின் தந்தங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றதும் தெரிய வந்தது. இதுதொடா்பாக வேலூா் மாவட்ட வனத் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா். இந்நிலையில் ஆந்திர மாநிலம், பலமநேரைச் சோ்ந்த சந்திரபாபு (48), மற்றொரு சந்திரபாபு (43), சிவராஜ், முனியப்பா ஆகியோரிடம் இறந்த யானைகளின் தந்தங்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, ஆந்திர மாநில வனத் துறையினரின் உதவியுடன் குடியாத்தம் வனத் துறையினா் ஆந்திர மாநிலம் சென்று 2 சந்திரபாபுகளை கைது செய்து, அவா்களிடம் இருந்த 2 யானை தந்தங்களை மீட்டு, அவா்களை கைது செய்து குடியாத்தம் அழைத்து வந்தனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய, தலைமறைவாக உள்ள சிவராஜ், முனியப்பா இருவரையும் வனத் துறையினா் தேடி வருகின்றனா்.