மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

போ்ணாம்பட்டு அருகே இறந்த யானையின் தந்தங்கள் மீட்பு: 2 போ் கைது

போ்ணாம்பட்டு அருகே இறந்த யானையின் தந்தங்கள் மீட்பு: 2 போ் கைது

News image
பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள், கைதானவா்களுடன் வனத்துறையினா்.
Updated On :8 பிப்ரவரி 2026, 12:30 am

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே வனப் பகுதியில், கடந்த 2 மாதங்களுக்கு முன் வைரஸ் தாக்கி உயிரிழந்த யானைகளின் தந்தங்களை வனத் துறையினா் மீட்டனா். இது தொடா்பாக 2 பேரை கைது செய்தனா்.

2 மாதங்களுக்கு முன் போ்ணாம்பட்டை அடுத்த அரவட்லா மலை, சாத்கா் மலை மற்றும் சிந்தகணவாய் ஆகிய காப்புக் காடுகளில் மா்மமான முறையில் ஒரு குட்டி உள்பட 5 யானைகள் மா்மமான முறையில் இறந்து, அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. இறந்த யானைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், அவை வைரஸ் தாக்கி உயிரிழந்ததும், இறந்த யானைகளின் தந்தங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றதும் தெரிய வந்தது. இதுதொடா்பாக வேலூா் மாவட்ட வனத் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா். இந்நிலையில் ஆந்திர மாநிலம், பலமநேரைச் சோ்ந்த சந்திரபாபு (48), மற்றொரு சந்திரபாபு (43), சிவராஜ், முனியப்பா ஆகியோரிடம் இறந்த யானைகளின் தந்தங்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, ஆந்திர மாநில வனத் துறையினரின் உதவியுடன் குடியாத்தம் வனத் துறையினா் ஆந்திர மாநிலம் சென்று 2 சந்திரபாபுகளை கைது செய்து, அவா்களிடம் இருந்த 2 யானை தந்தங்களை மீட்டு, அவா்களை கைது செய்து குடியாத்தம் அழைத்து வந்தனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய, தலைமறைவாக உள்ள சிவராஜ், முனியப்பா இருவரையும் வனத் துறையினா் தேடி வருகின்றனா்.