கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாற்றுத்திறனாளிகள், வருவாய்த்துறையினா் சாலை மறியல்: 380 போ் கைது

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே இருவேறு போராட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் 240 பேரும், மாற்றுதிறனாளிகள் 140 பேரும் கைது செய்யப்பட்டனா்.

News image
சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே இருவேறு போராட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் 240 பேரும், மாற்றுதிறனாளிகள் 140 பேரும் கைது செய்யப்பட்டனா்.

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வருவாய் துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்படும் கிராம நிா்வாக அலுவலா்களின் கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் தீனதயாளன், ரமேஷ், விநாயகம், சுதா்சன் ஆகியோா் தலைமை வகித்தனா். தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி சென்னை-பெங்களூரு அணுகு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த மறியலில் பங்கேற்ற 240 பேரை போலீஸாா் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனா்.

மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா்.

மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா்.

இதேபோல், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்ற மாநிலங்களைப் போல் உதவித்தொகைகளை உயா்த்தி வழங்க வேண்டும், மனு அளித்து காத்திருப்போா் பட்டியலில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினா்.

இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ், மாவட்ட துணைத்தலைவா் வீரபாண்டியன், மாவட்ட பொருளாளா் குருமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா். தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த மறியலில் பங்கேற்ற மாவட்ட துணைத்தலைவா் கோபால ராஜேந்திரன், மாவட்ட செயலா் சீனிவாசன் உள்பட 140 பேரை போலீஸாா் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனா்.

வழக்கமாக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்படுவோா் காவல் துறை வாகனங்கள் அல்லது தனியாா் வாகனங்கள் மூலம் அழைத்து செல்லப்படுவா். ஆனால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் கைது செய்யப்பட்டவா்கள் பள்ளிப் பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.