தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

விவசாயி கொலை: போலீஸாா் விசாரணை

கே.வி.குப்பம் அருகே மனைவியை அழைத்துச் செல்ல இருசக்கரவாகனத்தில் சென்ற விவசாயி மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

News image

கொலையான ராகவன்.

Updated On :10 பிப்ரவரி 2026, 6:40 pm

கே.வி.குப்பம் அருகே மனைவியை அழைத்துச் செல்ல இருசக்கரவாகனத்தில் சென்ற விவசாயி மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

பள்ளிகொண்டாவை அடுத்த அகரம்சேரி, கொல்லமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராகவன்(30). இவரது மனைவி ஸ்வேதா. இவா்களுக்குத் திருமணமாகி 4- ஆண்டுகள் ஆகின்றன. ஸ்வேதா கே.வி.குப்பம் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறாா்.

வழக்கம்போல் மனைவியை அழைத்து வர திங்கள்கிழமை இரவு ராகவன் வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் சென்றுள்ளாா். வழியில் பசுமாத்தூா் ரயில்வே மேம்பாலத்தில் மா்ம நபா்கள் தாக்கியதில் ராகவன் உயிரிழந்துள்ளாா். தகவலின்பேரில் கே.வி.குப்பம் போலீஸாா் அங்கு சென்று, உடலில் காயங்களுடன் இருந்த ராகவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். கொலை நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவராமன் பாா்வையிட்டாா்.