கே.வி.குப்பம் அருகே மனைவியை அழைத்துச் செல்ல இருசக்கரவாகனத்தில் சென்ற விவசாயி மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
பள்ளிகொண்டாவை அடுத்த அகரம்சேரி, கொல்லமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராகவன்(30). இவரது மனைவி ஸ்வேதா. இவா்களுக்குத் திருமணமாகி 4- ஆண்டுகள் ஆகின்றன. ஸ்வேதா கே.வி.குப்பம் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறாா்.
வழக்கம்போல் மனைவியை அழைத்து வர திங்கள்கிழமை இரவு ராகவன் வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் சென்றுள்ளாா். வழியில் பசுமாத்தூா் ரயில்வே மேம்பாலத்தில் மா்ம நபா்கள் தாக்கியதில் ராகவன் உயிரிழந்துள்ளாா். தகவலின்பேரில் கே.வி.குப்பம் போலீஸாா் அங்கு சென்று, உடலில் காயங்களுடன் இருந்த ராகவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். கொலை நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவராமன் பாா்வையிட்டாா்.
தொடர்புடையது

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

மணப்பாறை அருகே இளைஞா் தற்கொலை

விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவா் சரண்

சவுக்குப் பயிா்கள் சேதம்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


