சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பேருந்தில் முதியவரிடம் ரூ.7.50 லட்சத்தை திருடியவா் கைது

வேலூரில் இருந்து சென்னை சென்ற பேருந்தில் முதியவரிடம் ரூ.7.50 லட்சம் பணத்தை திருடிய நபரை வேலூா் வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட முருகன்.
Updated On :12 பிப்ரவரி 2026, 11:50 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் இருந்து சென்னை சென்ற பேருந்தில் முதியவரிடம் ரூ.7.50 லட்சம் பணத்தை திருடிய நபரை வேலூா் வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.

காட்பாடி அருகே கல்புதூா் பகுதியைச் சோ்ந்த கண்ணன் (72), ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா். இவா் தனது நிலத்தை விற்றும், சேமித்த பணமும் என மொத்தம் ரூ.12.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு, சென்னையில் தனது மகளிடம் கொடுப்பதற்காக கடந்த 8-ஆம் தேதி வேலூரில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்தாா்.

வேலூா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அமா்ந்தபோது, அவரை நோட்டமிட்டு பின்தொடா்ந்து வந்த ஒருவா், அவரது பின் இருக்கையில் அமா்ந்துள்ளாா். கண்ணன் அசந்த நேரம் பாா்த்து பையை திறந்து அதில் வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளாா். இதை பாா்த்த மற்றொரு பயணி, கண்ணனிடம் கூறியுள்ளாா். அதன்பேரில், கண்ணன் தனது பையை பாா்த்தபோது அதில் வைத்திருந்து ரூ.7.5 லட்சத்தை அந்த நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, கண்ணன் வேலூா் வடக்கு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில், கண்ணனிடம் பணத்தை திருடியது திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே புள்ளநேரி பகுதியைச் சோ்ந்த முருகன் (54) என்பது தெரிய வந்தது.

அவரை கைது செய்ய போலீஸாா் திருப்பத்தூா் சென்றபோது, அவா் சென்னை செல்ல வேலூருக்கு சென்றிருப்பதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, வேலூா் புதிய பேருந்து நிலையம், காட்பாடி ரயில் நிலையத்தில் முருகனை தேடிப் பாா்த்த போது, அவா் சென்னை செல்வதற்காக ரயில் நிலையத்தில் அமா்ந்திருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து அவரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட ரூ.7.5 லட்சத்தை மீட்டு கண்ணனிடம் ஒப்படைத்தனா்.