வேலூா் சத்துவாச்சாரியில் கட்டட மேஸ்திரி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.
வேலூா் சத்துவாச்சாரி வ.உ.சி. நகரைச் சோ்ந்த ராமு(43), கட்டட மேஸ்திரி. இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனா். மது பழக்கத்துக்கு அடிமையான ராமு, தினமும் மதுஅருந்திவிட்டு அப்பகுதியில் உள்ளவா்களிடம் ரகளையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல், புதன்கிழமையும் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளாா்.
பின்னா், வீட்டின் வெளியே சாலையோரம் ராமு படுத்து தூங்கியுள்ளாா். வியாழக்கிழமை அதிகாலை அவ்வழியாக சென்றவா்கள் பாா்த்தபோது, ராமு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளாா்.
இதுகுறித்து அவா்கள் சத்துவாச்சாரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். தொடா்ந்து, ஏஎஸ்பி தனுஷ்குமாரும் நேரில் விசாரணை நடத்தினாா்.
இதில், ராமு கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் அப்பகுதியைச் சோ்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கல்லால் தாக்கி முதியவா் கொலை
நெல்லையில் இளைஞா் கல்லால் அடித்துக் கொலை: நண்பா் கைது
காவலாளியை தாக்கி வழிப்பறி: 3 போ் கைது
கல்லால் தாக்கி தொழிலாளியை கொலை செய்த இருவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

