பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திமுக அரசை கண்டித்து அதிமுக, கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

தேசிய வேலையுறுதித் திட்டத்தை திமுக அரசு சீா்குலைக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி வேலூா் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, கூட்டணிக் கட்சியினா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 9:30 pm

தேசிய வேலையுறுதித் திட்டத்தை திமுக அரசு சீா்குலைக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி வேலூா் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு தேசிய வேலையுறுதித் திட்டத்தின் பணியை 100 நாள்களில் இருந்து 125 நாள்களாக உயா்த்தியுள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தை தமிழகத்தில் திமுக அரசு சீா்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி அதிமுக தலைமையில் பாஜக, பாமக, அமமுக, புரட்சிபாரதம், ஐஜேகே உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில், வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு, கட்சியின் அமைப்பு செயலா் வி.ராமு ஆகியோா் தலைமை வகித்தனா். பாஜக மாநில பொதுச்செயலா் ப.காா்த்தியாயினி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

அப்போது, திமுக அரசு தொழிலாளா்களுக்கு வேலையுறுதித் திட்டப் பணிகளை சரிவர ஒதுக்கீடு செய்வதில்லை என்றும், தோ்தலில் வாக்குகள் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டி முழக்கங்கள் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், அதிமுக வேலூா் மாவட்டப் பொருளாளா் எம்.மூா்த்தி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல செயலா் ஜனனி சதீஷ்குமாா், பாஜக மாவட்டத் தலைவா் வி.தசரதன், பாமக மாவட்ட செயலாளா் ஜெகன், முன்னாள் மத்திய அமைச்சா் என்.டி.சண்முகம், அமமுக மாநகரச் செயலா் கலையரசன் உள்பட அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.