ஏரியில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் கற்சிலை.
வேலூர்
ஏரியில் அம்மன் கற்சிலை கண்டெடுப்பு
குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஏரியில் சுமாா் 2- அடி உயரமுள்ளஅம்மன் கற்சிலை சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது.
குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஏரியில் சுமாா் 2- அடி உயரமுள்ளஅம்மன் கற்சிலை சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது. ஏரி நீரில் இருந்த சிலையைக் கண்ட அப்பகுதி மக்கள் அதை எடுத்து சுத்தம் செய்து மஞ்சள் நீரில் அபிஷேகம் செய்து, குங்குமம், பூ வைத்து வழிபாடு செய்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினா் அங்கு சென்று, சிலையை மீட்டுவட்டாட்சியா் அலுவலகம் கொண்டு சென்றனா். சிலை அங்கு வந்தது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

